கொழும்பு காலிமுகத்திடலில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.

நேற்று (28) இரவு , காலிமுகத்திடல் கொடி கம்பம் அருகில் உள்ள பீரங்கிக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.50 மணியளவில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் அடையாளத்தை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கிராண்ட்பாஸ் ஸ்டேட் வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய தியாகராஜா நாகராஜா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.