மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் சிக்கினர்.

இந்தியா, தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையர் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் தமிழகம் சென்றிருந்தனர்.

அங்கு அவர்களைத் தமிழகக் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை செய்த பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், மண்டபம் முகாமில் இருந்து தப்பியோடிய இருவரும், தமிழகத்தில் இருந்து படகொன்றில் சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் – வேலணை கடற்பரப்பினூடாக இலங்கையை வந்தடைந்த போது கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.