பொரளையில் கண்டுபிடிக்கப்பட்ட ஜனசக்தி நிறுவன தலைவர் மரணம்!

இன்று (15) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் வாகனத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட  ஜனசக்தி நிறுவன வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் பல கோடி ரூபா கடனை கொடுப்பதாக ஒருவரை சந்திக்க செல்வதாக மனைவிக்கு கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறாக குருந்துவத்தை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைவர் நேற்று (14) பிற்பகல் சென்றுள்ளார்.

அவர் வெளியேறி சிறிது நேரத்துக்கு பிறகு அவரது மனைவி அவரை அழைத்து பார்த்தபோது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய அவரது தொலைபேசி பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த தலைவரின் மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தலைவர் வந்த காரின் சாரதி இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்ததையும், கழுத்தில் கம்பியொன்றும் கிடந்ததையும் அவர் தனது விசாரணையின் போது பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்போது, ​​உடனடியாகச் செயற்பட்ட நிறைவேற்று அதிகாரி, மயானத்தில் இருந்த தொழிலாளியின் உதவியுடன் தலைவரின் கைகளையும் கழுத்தில் கிடந்த கம்பியையும் அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

தலைவரின் காருக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் தலைவரிடம் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 03 முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கீழே,

Leave A Reply

Your email address will not be published.