மைக்ரோ பேரூந்து மோதியதில் இரு இளைஞர்கள் பரிதாப பலி.

சற்றுமுன் நிகழ்ந்த விபத்து!
மைக்ரோ பஸ் மோதியதில் இரு இளைஞர்கள் பரிதாப மரணம்!

நேற்றிரவு 9:45 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு(மைக்ரோ) பஸ் ஒன்று காத்தான்குடியை அண்மித்த தாழங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பிராந்திய செய்தியாளர் #கையூம் சற்றுமுன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்களினால் குறித்த பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதனால் பஸ் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் தப்பி சென்றுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.