வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.

வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு:

வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் இனி கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், இல்லையென்றால் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்துவது தொடரும் என்றும் பிரகாஷ் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.