வவுனியாவில் நீர்நிலைக்கு விஷம் கலந்து 15 மாடுகளைச் சாகடித்த கொடூரர்கள்!

வவுனியா, பூம்புகார் கல்மடுபகுதியில் மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பரிதாபமாக சாவடைந்துள்ளதுடன், பல மாடுகள் உயிருக்குப் போராடி வருகின்றன.

மாடுகள் நேற்று மாலை நீர் அருந்துவதற்காக சென்றுள்ளன. அவை நீர் அருந்தி சிறிது நேரத்தில் படபடவென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளன. சுமார் 15 மாடுகள் இவ்வாறு அதேயிடத்தில் உயிரிழந்துள்ளன. மேலும் சில மாடுகள் உயிருக்குப் போராடி வருவதுடன் சில மாடுகள் காணாமல்போயுமுள்ளன.

சம்பவம் தொடர்பாக மாடுகளின் உரிமையாளர் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாடுகள் அருந்திய நீரில் விசம் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.