வரணி இயற்றாலை பகுதியில் தார் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேசசபையின் நிதி ஒதுக்கீட்டில் வரணிப் பிரதேசத்தில் காணப்பட்ட மக்கி வீதி ஒன்று தார் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளது.

வரணி இயற்றாலைப் பகுதியிலுள்ள வீரபத்திரர் வீதியே இவ்வாறு தார் வீதியாக மாற்றம் பெற்றுள்ளது.

பிரதேசசபை உறுப்பினர் சி.பிரபாகரனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முதற்கட்டமாக 0.5 மில்லியன் செலவில் இவ்வீதி புணரமைப்புச் செய்யப்பட்டது.

மழைக்காலங்களில் இவ்வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் இதனை புணரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேசசபை உறுப்பினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதி முதற்கட்டமாக தார் வீதியாக மாற்றம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.