யாழில் இந்தியத் துணைத் தூதுவர் – அங்கஜன் சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

நல்லூரில் அமைந்துள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு மாகாண மக்கள் குறிப்பாக யாழ். மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் தற்காலப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன், இந்திய அரசு இலங்கை மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் வறுமை மிகுந்த மாவட்டங்களில் யாழ். மாவட்டமும் உள்ளடங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், யாழ். மாவட்ட மக்களுக்கான தேவைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மேலும் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.