கோட்டாபய குடும்பத்துடன் இலங்கையை விட்டுச் சென்றார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியுடன் மனைவி அயோமா ராஜபக்ச மற்றும் அவர்களது மகன் மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோரும் சென்றிருந்தனர். இன்று அதிகாலை 2.55 மணிக்கு அவர்கள் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கையை விட்டுப் புறப்பட்டனர்

Leave A Reply

Your email address will not be published.