முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பால் படகு கவிழ்ந்து மீனவர் சாவு!

முல்லைத்தீவு, கொக்கிளாய் முகத்துவாரத்தில் கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர், கடற்கொந்தளிப்பால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மீகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது காயமடைந்த மற்றைய மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.