கோட்டாபய குடும்பத்தினருடன் டுபாயில்

இந்த நாட்களில் டுபாய் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முதல் புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது.

குடும்பத்துடன் டுபாயில் உள்ள ‘மிராக்கிள் கார்டனுக்கு’ சென்றிருந்தபோதுதான் அது எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை ஜனாதிபதி தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக துபாய் சென்றார்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளதாக இந்நாட்டின் பல ஊடகங்கள் மூலம் செய்தி வெளியாகின.

ஆனால் அந்த செய்தி தவறானது என்று நேற்று நாம் தெரிவித்திருந்தோம்.

முன்னாள் ஜனாதிபதி தற்போது டுபாயில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி மேலும் 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் எனவும் அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.