மேயர் பதவியைத் துறந்தார் மணி!

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

தனது பதவியை இராஜிநாமா செய்கின்றார் என்று கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அவர் இன்று தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் கடந்த 21 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்த போதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மேயர் பதவியிலிருந்து விலகும் முடிவை மணிவண்ணன் எடுத்தார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.