இன்று காலையில் 6 ரயில்கள் ஓடவில்லை.

2023 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று காலை ஆறு அலுவலக ரயில்கள் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று காலை களனிவெளி பகுதி புகையிரத பாதையில் இரண்டு புகையிரதங்களும், கடற்கரை பகுதிக்கான பாதையில் இரண்டு புகையிரதங்களும், பிரதான பாதையில் ஒரு புகையிரதமும், புத்தளம் பாதையில் தலா ஒரு புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு காலத்தின் கீழ் சுமார் 500 புகையிரத ஊழியர்கள் பணியிலிருந்து விலகியதுடன், நேற்று (01) 30 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.

இன்று மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில்வே வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.