மனைவியின் நடத்தை மீது சந்தேகம்….துண்டுதுண்டாக வெட்டி கால்வாயில் வீசிய கொடூரம்

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்ட காரணத்திற்காக அவரை துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கம் மாநிலம் திலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்ஸ்சாருல். இவரது மனைவி ரேனுகா காத்தூன். இருவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார்.

இந்த பெண்ணை கடந்த 24ஆம் தேதியில் இருந்து காணவில்லை என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கணவர் முகமதுவை பிடித்து காவல்துறை விசாரித்த போது தான் அதிர்ச்சி தகவல் அம்பலமானது.

மனைவி ரேனுகாவின் நடத்தை மீது கணவர் முகமதுக்கு சமீப காலமாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரேணுகா அழகு பயற்சி வகுப்பில் சேர்ந்து ப்யூடிசியனாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக பல முன்பின் தெரியாத ஆண்களிடம் இவர் பேசியது கணவர் முகமதுவுக்கு எரிச்சலையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்துமசுக்கு முந்தைய தினம் மனைவியை தனது பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காவ்வாய் பகுதிக்கு முகமது சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்து துண்டுகளாக வெட்டியுள்ளார். உடல் பாகங்களை சாக்குப்பையில் போட்டு மகாநந்தா நதியில் வீசியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில பேரிடர் மீட்பு குழு உடல் கால்வாயில் ரேணுகாவின் உடல் பாகங்களை தேடி வருகிறது. டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலை தொடர்ந்து அதே பாணியில் பெண்கள் கொலை செய்யப்படும் நிகழ்வு சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.