விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களைச் சந்தித்த ரணில்.

தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்துக்கும் விஜயம் செய்திருந்தார்,

கந்தர்மடம் – பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்துக்குச் சென்ற ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்கப்பட்டார்.

ஜனாதிபதிக்கு இந்து குருமார் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்ததோடு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர்.

தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வைத்தியர்கள், புத்திஜீவிகள், விரிவுரையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.