யாழ். மாநகர மேயர் தெரிவு சபையில் கோரமின்மையால் ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவுக்குச் சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர மேயரைத் தெரிவு செய்வதற்கான சபை அமர்வு இன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்றது.

அதன்போது 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் சபையைக் கூட்டுவதற்கான கோரமின்மையால் மாநகர மேயர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.

மாநகர மேயர் தெரிவையொட்டி மாநகர சபை வளாகத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபையின் சபா மண்டபத்தினுள் இன்று நுழைந்த மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.