உறைபனியிலும் காவல் பணி- உக்ரைன் போர் வீரர்.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதனால் உக்ரைன் ராணுவம், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா அளித்த நவீன டிரோன்கள் உதவியுடன் அவர்கள் மீண்டும் தீவிர போரில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ரஷிய அதிபர் புடின் கூறும்போது, “உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்” என்று கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் ராணுவமோ தங்கள் வீரர்கள் உறைபனியிலும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.

இது தொடர்பாக உறைபனியில் படுத்தபடி உக்ரைன் ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் இருக்கும் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.