நானுஓயா விபத்தில் உயிரிழந்த ஐவரின் இறுதிக்கிரியைகள் இன்று …

நானுஓயா ரதெல்ல விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் இறுதிக்கிரியைகள் ஹட்டன் திக் ஓயா ஜும்மா பள்ளிவாசல் புதைகுழியில் இன்று (21) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

திக் ஓயா நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான பிரேத பரிசோதனை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை கல்விப் பயணத்திற்காக ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது , நுவரெலியா நானுஒய்யா ரதெல்ல பிரதேசத்தில் வைத்து வானுடன் மோதி  விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இந்த விபத்தில் வானில் வந்தவர்கள் மட்டும் உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் வந்த மாணவர்களுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.