எண்ணை கசிவின் தாக்கம் அதிகரிப்பு….மீனவர்கள் மற்றும் கரையோர பிரதேசங்களில் உள்ள மக்கள் சற்று அவதானம்

சங்கமன்கண்டி கடல் பகுதியில் 38 கி.மீற்றருக்கு அப்பால் விபத்திற்குள்ளாகியுள்ள கப்பலில் வெடிப்புச் சம்பவம் அதிகம் ஏற்பட்டதால் கிழக்கு பிராந்தி பகுதிகளில் எண்ணை கசிவின் தாக்கம் அதிகரித்து கடல் நீரூடன் கலந்துள்ளது .

இதன் விளைவாக கடலின் அலைகள் சற்று உயர்ந்தும் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவே மீனவர்கள் மற்றும் கரையோர பிரதேசங்களில் உள்ள மக்கள் சற்று அவதானமாக இருக்குமாறுகேட்டுக்கொள்கின்றனர்.

மேலும் அலை உயர்ந்து காணப்படும் என்பதுடன் வேறு எவ்வித பாதிப் ஏற்படுத்தமாட்டாது எனவும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம்.மற்றும் பிரதேச செயலகம் திருக்கோவில்.
DMC and DS, Thirukkovil .

– – நிரோஜன் சதா

Leave A Reply

Your email address will not be published.