கண்டி சில்வெஸ்டர் கல்லூரி பாதுகாவலரைக் கொலை செய்த கொலையாளி கைது!

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் பாதுகாப்பிற்காக கடமையாற்றிய பாதுகாவலரின் கை கால்களை கட்டிப்போட்டு கொலை செய்த , கொலையாளி கண்டி பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பெண் ஒருவருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த உபுல் சம்பத் என்ற 27 வயதுடைய இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 17ம் தேதி காலை கல்லூரி விளையாட்டு வளாக கட்டிடத்தில் கை, கால்களை கட்டி வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.