உணவு பாதுகாப்பு தொடர்பான கூட்டம்.

யாழ். மாவட்டத்தின் பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கூட்டம் 03.09.2020 மாலை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ), மாவட்ட விவசாயம்,நீர்ப்பாசனம், கால்நடை துறைசார் பணிப்பாளர்,மற்றும் உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உற்பத்தி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
தற்சார்பு பொருளாதாரத்தினூடாக வறுமையை ஒழிக்கும் அதே வேளையில், சகல மக்களுக்கும் போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை அணுகுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.