கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 75வது சுதந்திர தினம் அனுஷ்டிப்பு!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடாளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று(04) இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பினை தொடர்ந்து, தேசியக் கொடியை மாவட்ட அரசாங்க அதிபர் ஏற்றிவைத்ததை தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொடி வணக்கத்துடன் சுதந்திர தின நிகழ்வு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமை உரை இடம்பெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து தற்கால சூழலில் உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துக்களை வழங்கியிருந்தார்.

மேலும் 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுதந்திர தின நிகழ்வை கொண்டாடியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.