யாழில் ரணிலை எதிர்த்துப் போராடிய கஜேந்திரன், சுகாஷ் உள்ளிட்ட 7 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்ட எழுவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துப் பொலிஸார் தடை ஏற்படுத்தினர்.

அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அடக்குமுறையைப் பயன்படுத்திய பொலிஸார், 7 பேரைக் கைது செய்து யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு தடுத்து வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.