கணினி சிஸ்டம் செயலிழந்தது…. பாஸ்போர்ட் வழங்க முடியாத நிலை

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் பாஸ்போர்ட் வழங்குவது முடங்கியுள்ளது.

நேற்று காலை முதல் இந்த முறைமை செயலிழந்துள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஸ்போர்ட் எடுக்க வந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பிந்திய செய்தி

கடவுச்சீட்டு பெறுவதற்கு இன்று (14) நேரத்தை ஒதுக்கியவர்கள் இன்று சேவைகளை பெற்றுக்கொள்ள வர வேண்டாம் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று வரவிருக்கும் விண்ணப்பதாரர்கள் நாளை மறுதினம் (15) வருமாறும் ஏனையவர்கள் குறித்த நேரத்திற்கு மறுநாள் வருமாறும் வெள்ளிக்கிழமை (17) முன்பதிவு செய்தவர்கள் கடவுச்சீட்டை சனிக்கிழமையன்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (13) விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் இன்று (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.