ஐ.பி.எல் -வெல்லுமா சிஎஸ்கே அணி?

சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்ததாக ஹர்பஜன் சிங்கும் விலகியுள்ளதால் சிஎஸ்கே அணி கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளதாக பார்வையாளர்களின் கருத்தாக இருக்கின்றது.

இந்த வருடம் செப்டம்பர் 19 ல் ஐ.பி.எல் சீசன் 13 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகின்றது.இப் போட்டியிலிருந்து ஹர்பஜன் சிங் விலகியுள்ளார். அவர்  சென்னை அணியின்  சுழற் பந்து வீச்சாளர் ஆவார்.

அவரின் தாயாரின் உடல்நிலை கருதி அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிகின்றது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்..

அருமை நண்பர்களே, தனிப்பட்ட காரணங்களால் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். இது கடினமான நேரம். சிஎஸ்கே நிர்வாகம் மிகுந்த ஒத்துழைப்பை அளித்துள்ளது. அவர்களுக்குச் சிறந்த ஐபிஎல் போட்டி அமையவேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.