65 உறுப்பினர்களை நீக்க ஐ.தே.க. அதிரடி தீர்மானம்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த, 65 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 65 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தொடர்பான, ஒழுக்காற்று விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களின் கட்சி உறுப்புரிமையும், உள்ளூராட்சி சபை உறுப்புரிமையும் இரத்தாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.