சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய மா கா பா..

பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதன் 9வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல பின்னணி பாடகர், பாடகிகள் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக தொகுத்து வழங்கி வருகிறார்கள் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா. இவர்கள் இருவருக்காகவே பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.

வெளியேறிய மா கா பா
இந்நிலையில், என்ன நடந்தது என்று தெரியவில்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சசியில் அடுத்து வரும் எபிசோடை மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்க வில்லையாம்.

அவருக்கு பதிலாக ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் ரியோ ராஜ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கவுடன் இணைந்து தொகுத்து வழங்க போகிறாராம்.

ஆனால், ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் மாகாபா வரமாட்டார் என்ற செய்தி பலருடைய காதுக்கு இனி அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கே வரமாட்டார் என்பது போல் போய் செர்ந்துவிட்டது.

ஆனால் அது உணமையில்லை, வெரும் ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டுமே மா கா பா வெளியேறியுள்ளார். அடுத்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மா கா பா வந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.