வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் போலீசாரால் கைது (வீடியோ)

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குழுவில் 48 மாணவர் பிக்குகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் மாணவர் பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலவந்தமாக அமைச்சு வளாகத்திற்குள் பிரவேசித்த குழுவினர், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கல்வியை மீள ஆரம்பிக்குமாறும், கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave A Reply

Your email address will not be published.