கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் மீட்பு.

கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் மீட்பு.

காசல் நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஓயா நீர்விழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்
மீட்கப்பட்டுள்ளதாக #நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலாவை லெட்சுமி கீழ்ப் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய ஆறுமுகம் ரவிகுமார் என்பவரே (04)  மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கெசல்கமுவ ஓயா பகுதிக்கு விரகு சேகரிக்க சென்ற ஒருவர் நீரில் சடலம் மிதந்து கொண்டிருப்பதை கண்டு பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்பட்ட பின் பொதுமக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த குடும்பஸ்த்தர் இன்று காலை 07.30 மணியளவில் வீட்டில் இருந்து தோட்டத்தில் உள்ள உப மின் உற்பத்தி நிலையத்திற்கு தொழிலுக்காக வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

மீட்கப்பட்ட சடலம் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவானினால் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.