பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்.

கேகாலை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்.

கேகாலை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், இளைஞர் ,யுவதிகளின் சுய தொழில் மற்றும் அபிவிருத்தி தொடர்பாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொட்டகலை சி.எல்.எவ். வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன், கேகாலை மாவட்ட தோட்ட தலைவர்கள், தலைவிகள் , பிரதேச மக்கள் உட்பட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.