ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்- சுனாமி ஆபத்து இல்லை.

ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது.

நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. முன்னதாக, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களில் இவ்விரு நாடுகளிலும் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.