இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது கலைமதி வி க

யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன்
தெல்லிப்பளைமின்னலடியாக்கி
(M. A JACKY) விளையாட்டுக்கழகம் முதல்முறையாக. மின்னொளியில் நடத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டித் தொடரில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது’

நேற்று (வெள்ளிக்கிழமை) கழக மைதானத்தில் இடம் பெற்ற ஏ பிரிவினருக்கான ஆட்டத்தில் மட்டுவில்மோகனதாஸ்’விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து புத்தூர் கலைமதிவிளையாட்டுக் கழக அணி மோதியது.

இப் போட்டியில் தமது சிறப்பான ஆட்டத்தின் மூலம் புத்தூர் கலைமதி அணியினர் முதலாவது சுற்று ஆட்டத்தினை 25:18 என்ற புள்ளி அடிப்படையிலும் 2 ஆவது சுற்று ஆட்டத்தினை 25:19 என்ற அடிப்படையிலும் வெற்றி பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.