சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினாவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (02) இரவு Zoom ஊடாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பான அனைத்து தரப்பினரிடமிருந்தும் தற்போது சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் ஜனாதிபதியுடன் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டமை தனித்துவமிக்கதொரு நிலைமை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், “புளூம்பெர்க்” செய்திச் சேவை, கடன் நெருக்கடியில் உள்ள மாநிலங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக இருப்பதாக சமீபத்தில் , சீனப் பிரதமர் லி கா-சியென் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரிடம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.