வவுனியா குடும்பத்தின் மர்ம மரணம்: உண்மையைப் பகிரப்படுத்த வேண்டும்.

“வவுனியாவில் நால்வர் அடங்கிய குடும்பத்தின் மர்ம மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைப் பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

இவ்வாறு ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

“வவுனியாவில் தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள் உட்பட நால்வர் அடங்கிய குடும்பத்தினர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் மரணம் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் வருகின்றன. உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் இன்னும் முழுமையாக வரவில்லை.

ஆகவே, இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைப் பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.