மருத்துவ பீட இறுதி வருட மாணவன் தவறான முடிவெடுத்து சாவு! – வவுனியாவில் தொடரும் சோகம்.

வவுனியாவில் பிரபல மருத்துவரின் மகன் தவறான முடிவெடுத்து மரணமடைந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இறுதி வருட மாணவனான இவர், நேற்று மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

செந்தில்காந்தன் லக்சிகன் என்ற 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர் வவுனியாவில் தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2016 ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ எடுத்து மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று மருத்துவபீடத்துக்குத் தெரிவாகியிருந்தார்.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பின்னர் இவர் தாய் மண்ணில் இருதய சிகிச்சை நிபுணராக வர விரும்புவதாக ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருந்தார்.

இவர் தற்கொலை செய்தமைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

வவுனியாவில் தொடர்ச்சியாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.