நெடுமாறனின் தலைவர் கதை சர்ச்சையாகிய வேகத்தோடு அமிழ்ந்து ஏன்?

சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான நெடுமாறன் இந்தியாவை மட்டுமல்ல இலங்கையையே உலுக்கும் ஒரு பெரும் சர்ச்சைக்குரிய செய்தியை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

அங்கு அவர், விபுவின் தலைவர் இன்னும் உயிருடன் இருக்கிறார், அவர் சரியான நேரத்தில் திரும்பி வர தயாராக இருக்கிறார் என அறிக்கையை தமிழக ஊடகங்கள் மூலம் வெளியிட்டதால், தமிழக அரசியலில் மட்டுமின்றி, இலங்கை அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இலங்கை ராணுவம் விபுவின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி பொய்யானது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், தமிழக ஊடகங்களிலல் சிலவற்றைத் தவிர , அநேக ஊடகங்களோ, இந்திய அரசோ இது பற்றி அதிகம் கொள்ளாமையால் , விபுவின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கதை மறைந்து போனது.

புகைப்படத்தை வெளியிட்ட வஜிர மீடியா!
எனினும் கடந்த வாரம் இந்திய தமிழ் ஊடகங்கள் விபுவின் தலைவரது வயதான புகைப்படத்தை வெளியிட்ட போது பிரபா குறித்த இந்தக் கதை மீண்டும் உயிர்ப்பித்தது.

இதை ‘வஜிர மீடியா’ என்ற தமிழக இணையதளம் வெளியிட்டது. அதை ‘வெங்கடேஷ் குமார் ஜி’ என்ற நபர் பதிவிட்டிருப்பதும் தெரிந்தது. இந்த புகைப்படம் தமிழக ஊடகங்களில் வெளியானதன் மூலம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு , அது அலையாக பரவியதை காண முடிந்தது.

விபுவின் தலைவர் குறித்த செய்தி மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 தலைப்பாக மாற அதிக நேரம் எடுக்கவில்லை, ஏறக்குறைய ஒவ்வொரு இந்திய சமூக ஊடகங்களும் இந்தப் புகைப்படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்தன. அதே சமயம் இந்த புகைப்படம் பிரபாவின் முதுமையை சித்தரிக்கும் புகைப்படம் என்பதால் அதில் உள்ள உண்மை, பொய்யை பரிசீலிக்க என பலரும் தேடல்களை ஆரம்பித்தனர்.

உண்மை கதை வெளியானது!
‘Fact Risendo’ என்ற இணையதளம் இங்கு முக்கியப் பங்காற்றியது. இந்த இணையதளம் சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் செய்திகளின் உண்மை மற்றும் பொய்யை ஆராயும் இணையதளமாகும்.

அதன்படி, இது குறித்து ஆராயத் தொடங்கி, அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட ‘வஜிர மீடியா’ ட்விட்டர் கணக்கு மூலம் கேள்வி எழுப்பி செய்தி அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். அங்கு, இந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல என்றும், பிரபாவின் பழைய புகைப்படத்தை, வயதுக்கு ஏற்ப முகத்தின் வடிவம் எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்டும் ‘ஃபேஸ் ஆப்’ மூலம் எடிட் செய்யப்பட்டு செயலாக்கப்பட்டது என்றும் பதிலளித்தனர். அதன்படி, அந்த புகைப்படம் போலியானது என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டது.

ஏன் போட்டீர்கள்?
ந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட அமைப்பாக அந்த அமைப்பு பெயரிடப்பட்டுள்ள நிலையிலும், விபுவின் தலைவர் பற்றி இவ்வாறான மர்மச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன் மறைபொருள் என்ன என்று தெரியவில்லை, ஆனால், அதை அடிப்படையாக கொண்டு திடீரென தமிழகம் முழுவதும் ஒரு விவாதம் எழுந்தது போல தணிந்து விட்டது என்பது பலரது கருத்தாகும்.
new photo is being circulated as an edited picture!

– அஸ்வமேத்தா

Leave A Reply

Your email address will not be published.