விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் பிளாஸ்ரிக் அற்ற யாழை நோக்கிய பயணம்.

விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் பிளாஸ்ரிக் அற்ற யாழை நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் இரண்டாவது பாரிய செயற்திட்டம் ஒன்று இடம்பெற்றது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையினை மையமாக கொண்டு தெல்லிப்பழை நகர வீதிகளில் காணப்படும் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பொறுக்கியெடுக்கப்பட்டு உரிய முறையில் வகைபிரித்து பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ் நிகழ்விலே இராணுவத்தினர் , பொலிசார்,பொது சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தன்னார்வ இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.