பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவு.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கோர காமினி லொக்குகே தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யதாமினி குணவர்தன அவரது பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த கெட்டகொட வழிமொழிந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் புதிய தலைவர் குறிப்பிடுகையில், பொது மனுக்கள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத சந்தர்ப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவை தொடர்பில் எதிர்கால நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்கு முக்கிய பங்காற்றும் பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக தான் இதற்கு முன்னரும் பணியாற்றியதை நினைவுகூர்ந்த கௌரவ காமினி லொக்குகே எதிர்காலத்திலும் அதற்கு அர்ப்பணிப்பதாகத் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.