அனைவரும் ரணில் பக்கமே! அடுத்து ஐ.தே.க. ஆட்சி உறுதி!! – அகிலவிராஜ் அதீத நம்பிக்கை.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கம் அனைவரும் திரண்டுள்ளனர். எனவே, அடுத்த ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலேயே மலரும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்கப்பூரை லீகுவான் மீட்டெடுத்தார். மலேசியாவை மகாதீர் முகமது கட்டியெழுப்பினார். தனிநபர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு பின்னால் அனைவரும் திரண்டனர்.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கம் அனைவரும் திரண்டுள்ளனர். எனவே, அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆதரவு வழங்குவார்கள். ஐ.தே.க. தலைமையிலேயே புதிய ஆட்சி மலரும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.