யாழ். திருநெல்வேலி சிறுவர் இல்லத்தின் மீது தாக்குதல்

யாழ். திருநெல்வேலி பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தின் மீது நேற்று (27) இரவு சிலர் தாக்குதல் நடத்தியதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்.நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அங்கு பணிபுரிந்த ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக சிறுவர் இல்லத்தின் முகாமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இத்தாக்குதல் காரணமாக சிறுவர் இல்லத்தின் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறுவர் இல்ல காப்பாளர் தெரிவித்துள்ளார்.தாக்குதல் சம்பவத்தின் போது சிறுவர் இல்லத்தில், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 58 பேர் இருந்துள்ளனர்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்ட அன்றே சிறுவர் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், இது தொடர்பில் குறித்த நபர் மீது சந்தேகம் நிலவுவதாக சிறுவர் இல்ல முகாமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் , பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபரை தேடிச் சென்றபோதும், அவர் தங்கியிருந்த இடத்தை விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.