நாளை முதல் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் 35 ருபாய் வீதம் பேக்கரியாளர்களுக்கு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் பேக்கரிகளுக்கு மட்டும் 35 ரூபா வீதம் , நாளை (29) முதல் விநியோகம் செய்யப்படவுள்ளதாக இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பான அறிக்கை நாளை வெளியிடப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் குளிர்சாதனப் பெட்டியில் 90 நாட்கள் வரை வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் துறைமுகத்தில் இருந்து முட்டைகளை விநியோகிக்கும் போது, ​​துறைமுகத்தின் கிடங்குகளில் 7 நாட்களாக முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.