கழுத்து அறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை!

கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் மொனராகலை – பதல்கும்புர பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

தர்மபால விஜயசிறி (வயது 41), ரோஹித குணரட்ன (வயது 38) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காணித் தகராறில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.