இலங்கை மக்களுக்கு பிடிக்காத குடும்பம் , ராஜபக்ச குடும்பம் (கருத்து கணிப்பு)

இலங்கை அரசியல்வாதிகள் மீதான மக்களின் விருப்பு வெறுப்புகள் குறித்து IHP நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இலங்கையின் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

அவற்றுள் ராஜபக்ச குடும்ப அரசியல்வாதிகளுக்கு மிகக் கடுமையான மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் பசில் ராஜபக்ச ராஜபக்ச மிகவும் விரும்பப்படாதவராக புறக்கணிக்கப்பட்டுள்ளார். (-73).

கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, டொக்டர். சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே (+7) மற்றும் பேராசிரியர் சன்ன ஜெயசுமண (+1) ஆகியோருக்கு மட்டுமே மக்களின் விருப்பு (குறைந்த வெறுப்பு) உள்ளது. இப்பட்டியலில் அடுத்தவர் கலாநிதி ஹரினி அமரசூரிய (-1).

செப்டம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

டொக்டர் ரவி ரன்னத்யெலிய தலைமையில் IHP ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த கருத்துக்கணிப்பு இலங்கையின் அனைத்து மாகாணங்களையும், அனைத்து இனத்தவர்களிடமும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.