சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருந்த 39 சீனர்கள் கைது.

அளுத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பல மாதங்களாக தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 39 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சுற்றுலா வீசா பெற்று இலங்கை வந்த போதிலும் விசா காலாவதியான பின்னரும் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியுள்ளனர். அவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அளுத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்களது கடவுச்சீட்டு விசா காலாவதியாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் வேலைக்கு வந்ததாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பெரும் இணைய பண மோசடிகளுக்கு இந்த நாட்டில் இருந்து செயல்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.