சஹாரான் சகோதரர் கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது.

ஈஸ்டர் தாக்குதல் கொலையாளி சஹாரான் ஹாசிமின் மனைவியின் சகோதரர் ஒருவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தினமான நேற்று (09) நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக நீர்கொழும்பு , கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூன்றரை வருடங்களாக விளக்கமறியலில் இருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரது மனைவியின் பெற்றோரின் வீட்டுக்குச் சென்ற போது சந்தேகத்தின் அடிப்படையில் அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கட்டுபொத்த பொலிஸாரால் தமக்கு தகவல் கிடைத்ததாக சந்தேக நபர் கொச்சிக்கடை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.