கணவனின் தாக்குதலில் மனைவி பலி!

இருபத்தி மூன்று வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவர் கணவனால் பொல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று அரநாயக்க பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

லம்புடுவ, மில்லங்கொட பகுதியைச் சேர்ந்த மொஹொத்தல குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற பெண்ணே குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு செல்லும் பொதே குறித்த பெண், சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க பொலிஸார் சம்பவம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிக்கை செய்ததன் பின்னர் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த பெண்ணை தாக்க பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொல்லு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.