சிறைக்குள் பொருட்களை வீச முற்பட்டவர் மாட்டினார்

கொழும்பு மகசின் சிறைச்சாலையினுள் ஹெரோயின் மற்றும் கையடக்கத் தொலைபேசி மின்கலங்களை வீச முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையினுள் பொருட்களை வீச தயார் நிலையில் உள்ளன என்று கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலமுல்ல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சிறைச்சாலையினுள் வீசுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 02 கிராம் 725 மில்லிகிராம் ஹெரோயின், 36 ஆயிரம் ரூபா பணம், 10 கையடக்கத் தொலைபேசி மின்கலங்களுடன் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு 08 ஐச் சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை அளுத்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, சந்தேகநபரிடம் கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.