506 கிலோ பீடியை கடத்த முற்பட்ட 6 பேர் சிக்கினர்!

சட்டவிரோதமான முறையில் 506 கிலோ கிராம் பீடித் இலையைக் கொண்டுவர முயற்சித்த 6 பேர் மாரவில கடற்பரப்பில் கடற்டையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போதே, குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், பேசாலை, பன்னல, எழுவக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 18 – 50 வயது இடைப்பட்டவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து பீடிகள் இலைகள் நிறைக்கப்பட்ட 16 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன என்று கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பீடி இலைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.