“நாளைய தேசத்தில் உங்களுக்கொரு வீடு “

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக “உங்களுக்கான வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” எனும் நிரந்தர வீடு உதவித் திட்டத்தில் சுமார் 50% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதன்படி, 2021ல், 12,231 வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டு, அதில், 6,039 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 2022ல், 1,465 வீடுகளுக்கான பணிகள் துவங்கப்பட்டாலும், 25 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 1,215 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் 727 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை தொகுதியில் மட்டும் 159 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது 78 வீடுகளின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்ததுடன், முந்தைய ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களில் முடிக்கப்படாத வேலைகளை நிறைவு செய்வதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு திறைசேரி 3750 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி மேலும் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 14,022 கிராம சேவை பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு கிராம சேவை பகுதிக்கும் ஒரு வீடு வீதம் 14,022 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.