மொட்டு கட்சியின் அடுத்த தலைவர் யார்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் (மொட்டு கட்சி) அடுத்த தலைமைத்துவத்திற்கு இரண்டு பெயர்களை முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கட்சியின் தலைமைப் பதவிக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த வேளையில், கட்சியின் இளம் உறுப்பினர்களால் நாமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக அடுத்த தலைவர் தொடர்பில் பொது மக்கள் முன்னணியில் சில பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.